35 வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அழைத்து சென்ற கிராம மக்கள்.. இன்னும் திரும்பாத மர்மம்!

Sri Lanka Army Sri Lankan Tamils Batticaloa
By Dev Sep 09, 2025 12:32 PM GMT
Report

1990ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டு இன்னும் திரும்பாத தனது கிராம மக்களை கண்டுபிடித்து தருமாறு மட்டக்களப்பு சத்துருக்கொண்டானை சேர்ந்த வைரமுத்து குழந்தைவடிவேல் என்ற நபர் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு கடிதத்தில் மேலும், 

வைரமுத்து குழந்தைவடிவேல் ஆகிய நான் தங்களிடம் முறைப்பாடு செய்யும் விடயமாவது யாதெனில், கடந்த 09.09.1990 அன்று மாலை 5.30 மணியளவில் எமது கிராமம் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்ட ஊடகவியலாளர்!

மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்ட ஊடகவியலாளர்!

இனப்படுகொலை

கிராம மக்கள் கைக்குழந்தைகளுடன் பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் உட்படப் பலர் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண்(BOYS TWON) இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டாராகள்.

அங்கு இலங்கையின் ஆயதப் படையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

சத்துருகொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற இக்கொடூரமான இனப்படுகொலையின் போது, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள். பெரியவர்கள், அங்கவீனர்கள் என 186 பேர் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர் என இச்சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிவந்த நபர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

35 வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அழைத்து சென்ற கிராம மக்கள்.. இன்னும் திரும்பாத மர்மம்! | Police Complaint On Dissapeared People Batticaloa

இவர்களில் 38 பேர் சத்துருகொண்டானையும், 39 பேர் பனிச்சையடியையும், 62 பேர் பிள்ளையாரடியையும், 47 பேர் கொக்குவில் ஆகிய நான்கு கிராமங்களையும் சேர்ந்தவர்களாவர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களின் தாயகப் பிராந்தியங்களான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட பாரிய கூட்டுப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை 1997இல் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிறுவினார்.

இந்த விசாரணையில் இலங்கை இராணுவத்தில் இருந்த மூன்று அதிகாரிகளான கெப்டன் வர்ணகுலசூரிய, கெப்டன் ஹேரத், கெப்டன் விஜயநாயக்க ஆகியோர் இந்த சத்துருக்கொண்டான் படுகொலைக்கு காரணமானர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேற்படி விசாரணைக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி கே.பாலகிட்னர், இப்படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றவாளிகளை பொறுப்பேற்குமாறும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வலியுறுத்தினார்.

மனித எச்சங்கள்

எனினும், அப்போதைய அரசாங்கம் இதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம். மேற்படி இலங்கை இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களில் எனது குடும்பத்தினை சேர்ந்த அப்பா. அம்மா, தங்கை, தம்பி எனது அக்காவின் பிள்ளைகள் மூவர், அம்மப்பா மற்றும் அம்மம்மா உட்பட 10 பேரும் உள்ளடங்குகின்றனர்.

எமது கும்பத்தினை சேர்ந்த உறவுகளுடன் அழைத்து செல்லப்பட்ட 186 பேரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்பதனை தங்களுக்கு தெரியத்தருகின்றேன்.

மேற்படி உனது உறவுகள் உட்பட எமது கிராமத்தில் உள்ள மக்களை கிராம சுற்றுவளைப்பின் ஊடாக மேற்படி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட போது நானும் பயத்தில் ஒழிந்திருந்து பார்த்தேன் என்பதனையும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிட விரும்புகின்றேன்.

35 வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அழைத்து சென்ற கிராம மக்கள்.. இன்னும் திரும்பாத மர்மம்! | Police Complaint On Dissapeared People Batticaloa

நான் எனது குடும்ப உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினையும் அதற்கான நீதியினையும் பல வருடங்களாக தேடியும் கிடைக்கவில்லை.

எனவே எனது உறவுகள் உட்பட அனைவரும் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் (BOYS TWON) இலங்கை இராணுவ முகாமில் வைத்து வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு உரிய பகுதியில் புதைக்கப்பட்டதாக உயிர் தப்பிய நபரின் ஊடாக கேட்டு அறிந்தோம்.

ஆகையால் எனது குடும்ப உறவுகளின் மனித எச்சங்களைக் கண்டு கொள்ள வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

எனவே மேற்படி அழைத்து செல்லப்பட்ட எனது குடும்ப உறவுகள் உட்பட அனைவரினதும் உடல் புதைக்கப்பட்டுள்ள பகுதியான முன்னைய சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் (BOYS TWON) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசங்களில் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நான் தங்களிடம் முறைப்பாடு செய்கின்றேன் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!

ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US