ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி விமர்சித்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் மிததெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் அடங்கிய கொள்கலன்கள், அரசாங்கத்தினால் அண்மையில் எதுவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் உள்ளடங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்களும் பதிவுகளை இட்டுள்ளனர்.
ஒரு சிலர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தனர்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், அவ்வாறானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri