நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் (Video)
அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு
வந்த மட்டு.கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக
அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி - சரவணன்
சட்டவிரோத மணல் அகழ்வு
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோபளை கிழக்கு பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது, குறித்த அகழ்வில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட இரு உழவு இயந்திரங்களும், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகவல் - எரிமலை