கோவிட் தொற்றுடன் மக்கள் மத்தியில் நடமாடிய நபர் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் மத்தியில் நடமாடிய போது கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஸ் தெரிவித்துள்ளார்.
இவர் இன்று(15) காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரான குறித்த நபர் சனிக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தலை உதாசீனம் செய்து இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பரிவிற்குட்பட்ட பொதுச் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு மக்கள் மத்தியில் நடமாடியபோதே பொலிஸாரும் ,சுகாதார அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.
கைதான தொற்றாளர் கரடியனாறு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு நோய் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
