பருத்தித்துறை மீன் சந்தை முடக்கப்பட்டது
யாழ்.பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
மீன் சந்தை வியாபாரிகளுக்கு சுகாதார நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் பல தடவைகள் வழங்கப்பட்டபோதும் அவற்றை கடைப்பிடிக்காது விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இன்றிலிருந்து சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர.
கோவிட் அச்சுறுத்தல் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.