இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவில் கைது
இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள பொடி லெசி, இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவான போதைப் பொருள் வர்த்தகரும், பிரபல பாதாள உலகப் புள்ளியுமான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்க, இந்தியாவின்(India) மும்பை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
நீண்ட காலம் தடுப்புக் காவல் மற்றும் விளக்கமறியலில் இருந்த பின்னர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பொடி லெசி, நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கைது
எனினும், அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இலங்கையில் இருந்து இரகசியமாக தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர் இந்தியாவில் தலைமறைவாக பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அவர் இந்தியாவின் மும்பை நகரில் வைத்து தற்போது இன்டர்போல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam