பேராதனை பல்கலைக்கழக சொற்பொழிவு இரத்து: தலையீட்டை மறுக்கும் பிரதமர்
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதில் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின்(Harini Amarasuriya) அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான சொற்பொழிவை வளர்ப்பதற்கு அடிப்படைகளான கல்வி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கக் கொள்கைகள்
அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சி என்பது அரசாங்கம் கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ள ஒரு கொள்கை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் உட்பட பல்வேறு கருத்துக்களை அடக்குமுறைக்கு அஞ்சாமல் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் கூடிய இடங்களாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும்.
ஆயினும்கூட, கல்வி வெளிகளுக்குள் ஜனநாயக வெளிப்பாடு மற்றும் திறந்த உரையாடலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri