ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள் எம்மை அடக்க நினைக்கிறார்கள்: பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி

Nalin Bandara Jayamaha Pillayan Sri Lanka Politician Sri Lankan political crisis
By Harrish Sep 21, 2023 08:54 PM GMT
Report

தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள், ட்ரிப்போளி முகாம்களை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதூங்கவை கொன்றவர்கள், 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றவர்கள் இன்று எம்மை பேச விடாமல் செய்கிறார்கள் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்” என்ற பிள்ளையானின் கருத்திற்கு நாடாளுமன்றத்தில் நளின் பண்டார பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

“நான் சர்வதேச விசாரணைக்கு தயார் நீங்கள் அதை எப்பொழுது நடத்துவீர்கள் என்பதை சொல்லுங்கள் அதற்கு தயாராக இருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் குண்டு வைத்த விடயங்கள், நடந்து முடிந்த விடயங்கள் உங்களுடைய தலைவருக்கு அதற்கு பின்னர் நாட்டின் பதவி துறந்த ஜனாதிபதி அதிகாரத்தை வழங்குவதற்கு முன்வந்தார்.

கஜேந்திரன் எம்.பியை தாக்கியவர்களுக்கு பிணை

கஜேந்திரன் எம்.பியை தாக்கியவர்களுக்கு பிணை


அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றீர்கள், சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களை முன்வைப்பதை எண்ணி நான் கவலை அடைகின்றேன்"என பிள்ளையான் தெரிவித்திருந்தார்.

நளின் பண்டார

இந்நிலையில் பிள்ளையானின் கருத்திற்கு பதிலளித்த நளின் பண்டார,

“கௌரவ சபாநாயகர் அவர்களே பிள்ளையானுக்கு இந்த விடயங்கள் சிறுபிள்ளைகளுக்கு உரிய செயலாக இருக்கக்கூடும், எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த, காயம் அடைந்த மக்களுக்கும் இன்று பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கும் இந்த விடயங்கள் சிறுபிள்ளைத்தனமானவை அல்ல.

நீங்கள் இந்த நாட்டின் வரலாற்றில் செய்தவற்றை நாம் நன்றாக அறிவோம். உங்களுடைய ஆற்றல் எங்களுக்கு தெரியும். உங்களினால் எங்களை அமைதி படுத்த முடியாது.  இதில் ஒரு நியாயம் கிடைக்கும் வரையில் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.

ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள் எம்மை அடக்க நினைக்கிறார்கள்: பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி | Pliiayan Parlimant Speech

உங்களினால் எங்களை கட்டுப்படுத்தி விட முடியாது. இது அரசாங்கத்தின் பிழையாகும் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள், ட்ரிப்போளி முகாம்களை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதூங்கவை கொன்றவர்கள், 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றவர்கள் இன்று எம்மை பேச விடாமல் செய்கிறார்கள்.

இதுதான் உண்மை மண்ணெண்ணெய் ஊற்றும் போது சாரைப்பாம்புகளுக்கு இருக்க முடியாது. அது போன்ற ஒரு நிலைமையை இன்று உருவாகியுள்ளது. இது எல்லாமே திட்டமிட்டு செய்யப்படுகின்றது. நான் என்னுடைய பேச்சை வேறொரு இடத்தில் இருந்து ஆரம்பிக்க இருந்தேன்.

எனினும் இந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க நேரிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அந்த காலப்பகுதியில் சஹ்ரானின் சகாக்கள் காத்தான்குடி சம்பவம் ஒன்று தொடர்பில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த இடத்திலேயே இந்த இரண்டு தரப்புகளும் ஒன்றிணைந்து பின்னர் அசாத் மவுலானா கூறுவது போன்று இவர் அந்த குழுவினரை வனாத்துவில்லுவில் வைத்து சலேவிடம் அறிமுகம் செய்கின்றார்.

இந்த அனைத்துமே அதிகாரம் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியே ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

சனல் 4 விவகாரம் மறைக்கப்பட்ட பல விடயங்களை வெளிக்கொண்டுவரும்: ஹிஸ்புல்லாஹ் பகிரங்கம்

சனல் 4 விவகாரம் மறைக்கப்பட்ட பல விடயங்களை வெளிக்கொண்டுவரும்: ஹிஸ்புல்லாஹ் பகிரங்கம்

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US