நற்பிட்டிமுனை பொது சந்தை தொடர்பில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கை(Photo)
நற்பிட்டிமுனை-சேனைக்குடியிருப்பு தமிழ், முஸ்லிம் மக்கள் பரவலாக பாவித்து வரும் சந்தையின் நீர் தாங்கி பல மாத காலமாக உடைந்து சேதமடைந்துள்ளது.
இந்த பொது சந்தையின் பிரச்சினைக்கு மாநகர சபையின் ஆணையாளர் தீர்வை வழங்க முன்வராமல் இருக்கின்றார் என நற்பிட்டிமுனை பொது சந்தை வர்த்தகர்களும் ஊர் பொது மக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
மேலும் மீன் சந்தை மற்றும் மலசலகூடம் கழுவி சுத்தம் செய்யப்படாமையால் துர்வாடை வீசுவதாகவும் தொற்று நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக அங்குள்ள திண்மக்கழிவுகள் அகற்றப்படாமையினால் அங்கு தேங்கியுள்ள கழிவுகளால் பாரிய சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தீர்வு
மாநகர
முதல்வர், ஆணையாளர் இந்த ஊரை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்
சீ.எம்.முபீத் ஆகியோர் நற்பிட்டிமுனை மக்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை
பெற்றுத்தர முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 9 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
