நுவரெலியாவில் பாற்சோறு சமைத்து கொண்டாடிய தோட்டத்தொழிலாளர்கள்
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, நுவரெலியா (Nuwaraeliya) - பூண்டுலோயா மக்கள் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளனர்.
பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்க வேண்டுமென அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவை வழங்க வேண்டுமென கம்பனிகள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்திருந்தது.
இந்நிலையில், அவ்வாறு தடை உத்தரவு வழங்க முடியாதென நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து, 1700 ரூபா நாளாந்த வேதனம் கிடைக்குமென பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தினர்
இதன்போது, பேர்லன்ஸ் தோட்டம், ஹெரோ தோட்டம், கயப்புக்கலை தோட்ட மக்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
