86 கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைதிட்டம்
நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இளநீர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் தெங்கு செய்கை சபை இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட கிராமங்கள்
இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03, கண்டியில் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஆலோசனைகள்
நாட்டில் இளநீர் செய்கைக்கு ஏற்ற 86 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்படி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இளநீர் நாற்றுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் ஒரு கிராமத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் இளநீரை யாராவது பயிரிட விரும்பினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam