மும்பை விமான நிலையத்தில் திடீரென இரண்டாக உடைந்து விழுந்த விமானத்தினால் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சிறிய ரக விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகி பாதியாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனமழை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அதில் பயணம் செய்த எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பதிவாகியமை இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியுள்ளதுடன், மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam