சர்வதேச விசாரணை பொறியில் கோட்டாபய - கருணா - பிள்ளையான்: தப்புவதற்கு புதிய வியூகம்(Video)
சனல் 4 ஆவணப்படத்தினுடைய பின்னணியில் கோட்டாபய உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச விசாரணைக்கு உள்ளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமானது இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும்? என லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு கேடயமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்த நினைப்பதாகவும், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு உள்நுழைய திட்டமிடுகிறார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜபக்ச தரப்புக்கும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri