பியுமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை
தான் மிகவும் நியாயமான வியாபாரங்களில் பணம் சம்பாதிப்பதாகவும், போதைப்பொருள் வியாபாரம் செய்ததில்லை எனவும் பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
இன்று (1) பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண் தொழில் நடத்தும் போது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக வருந்துவதாகவும், தான் நிரபராதி என்றும், என்ன குற்றச்சாட்டுகள் கூறினாலும் பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
தன்னிடம் 20 வங்கிக் கணக்குகள் இல்லை என்றும், இருக்கும் ஒன்பது கணக்குகளும் வணிகம் தொடர்பானவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக எழுந்த முறைப்பாட்டின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
