பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள்

Pillayan Ranil Wickremesinghe Sarath Fonseka Hirunika Premachandra Udaya Gammanpila
By Benat Apr 19, 2025 05:58 AM GMT
Report

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், யுத்தக் காலத்தில் ஒருபோதும் இராணுவத்தினருக்கு உளவுத் தகவல்களை தரவில்லை என்றும், அவரால் இராணுவத்தினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர(Hirunika Premachandra) தெரிவித்துள்ளார். 

எனவே,  பிள்ளையான் வாயைத் திறந்து வாக்குமூலங்களை வழங்கினால் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று கடந்த கால ஆட்சியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்காகத்தான் உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் அவரை தேசிய வீரராக காட்ட முனைகின்றனர் என்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். 

ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

ரணில் கைதாவாரா..

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில், 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்காது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் | Pillayan Arrested Cid

இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எவ்வாறு நம்ப முடியும்?

பிள்ளையானின் கைது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஏன் இதனை சரியாகக் கையாளவில்லை? உதய கம்மன்பில பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? இது தொடர்பில் விசாரணைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிள்ளையான் இராணுவத்துக்கு உளவுத் தகவல்களை வழங்கியமை பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடாக இராணுவத்துக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள்..

அவ்வாறிருக்கையில் கம்மன்பில போன்றோர் குறிப்பிடும் விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியவையாகும். இது ஒரு பெரிய நாடகம் என்றே எமக்குத் தோன்றுகிறது.

ஒருபுறம் பட்டலந்த குறித்து பேசப்பட்டது. மறுபுறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பிள்ளையான் போன்றோரது குரலை முடக்குவதற்காக முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் | Pillayan Arrested Cid

பிள்ளையான் என்ற நபர் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவருக்கு வழங்க வேண்டிய சகல பாதுகாப்புக்களை வழங்கி, அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றை வழங்க வேண்டும்.

பிள்ளையான் வாயைத் திறந்தால் எமது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளிவரக் கூடும்.

எனவே அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான பணியாளராகவே கம்மன்பில தன்னை சட்டத்தரணியெனக் காண்பித்துக் கொண்டு பிள்ளையானை சந்திக்கின்றார். அவரை எவரேனும் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை

இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு! அதிரடியாக கைது செய்யப்படும் பிள்ளையானின் சகாக்கள்

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு! அதிரடியாக கைது செய்யப்படும் பிள்ளையானின் சகாக்கள்

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US