பிள்ளையானால் கடத்தப்பட்ட மற்றுமொரு நபர்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..
கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அந்தவகையில், யுத்த காலத்தின் இறுதிப்பகுதியான 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிள்ளையான் மற்றும் அவரின் குழுவினரால் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் தொடர்பில் சில தகவல்கள் கசிந்துள்ளன.
அதற்கமைய, 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் உள்ள வர்த்தகர்களை கடத்தி, பிள்ளையான் பணம் பறித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, தனது சித்தப்பா மற்றும் அவரின் மகனையும் பிள்ளையான் குழுவினர் கடத்தி, 5 கோடி ரூபா பணம் பெற்றதாக எமது தலைமுறை கட்சியின் ஸ்தாபகர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிள்ளையான் போன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பிள்ளையான் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 21 மணி நேரம் முன்
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri