பிள்ளையானுக்கு எதற்கு இரண்டு வாகனம்..! கூட்டத்தில் சர்ச்சை (Video)
உங்களைப் போல் அமைச்சர்களை நிறுத்தினாலே இந்த அரசாங்கம் இயங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நோக்கி காட்டமாக தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் குருமண்வெளி - மண்டூர், குருக்கள்மடம் - அம்பிளாந்துரை பாதைக்கான கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்திலேயே கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துரைக்கும் போது சாணக்கியன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நிதியும் இல்லாமல் ஒன்றும் இல்லாம் வெறும் அமைச்சுப் பதவியை மாத்திரம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அரசாங்கத்திற்கு பணம் சேர்த்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம். ஆளுநர் சொல்வதற்காக எல்லாவற்றையும் நாம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிள்ளையானுக்கு எதற்கு இரண்டு வாகனம் எனவும் அவர் வினவியுள்ளார்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
