மட்டக்களப்பின் மிக முக்கிய தீவை அழிக்கும் பிள்ளையான் சகாக்கள்! வெளியான காணொளி
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய தீவு பகுதியான நாசிவன்தீவு பகுதியை அழிக்கும் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் சகாக்கள் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், நாசிவன்தீவு பகுதிக்கு வாழைச்சேனை கோறளைப் பற்று பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (TMVP) கட்சியின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் உடன் பிள்ளையானின் ஆதரவாளர்கள் சென்று மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நாசிவன்தீவு மீனவர் சங்கம், இளைஞர் அமைப்புக்கள், கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.