வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை நோக்கி ஆன்மீக பாத யாத்திரை
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை புதன்கிழமை (28.08.2024) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆன்மீக பாதயாத்திரையானது, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை காலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உணவு வசதிகள்
இந்த யாத்திரை, 04ஆம் திகதி கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து காலை வேளை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடையும் என்று சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்பாதயாத்திரையில் பக்த அடியார்களை கலந்து கொள்ளுமாறும், கலந்து கொள்பவர்களுக்கு உணவு வசதிகள் வழங்கப்படும் என்றும், கலாசார உடையுடன் கலந்து கொள்ளுமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |