இலங்கைக்கு பயணத் தடை விதித்தது பிலிப்பைன்ஸ்!
கோவிட் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு சென்ற பயணிகள் 7ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பினால் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படாது. எனினும், அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவ்வாறாயினும், தற்போதைய தடைகள் மற்றும் நடைமுறைகள் பொதுவாக வரும் பயணிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
