இலங்கைக்கு பயணத் தடை விதித்தது பிலிப்பைன்ஸ்!
கோவிட் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு சென்ற பயணிகள் 7ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பினால் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படாது. எனினும், அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவ்வாறாயினும், தற்போதைய தடைகள் மற்றும் நடைமுறைகள் பொதுவாக வரும் பயணிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
