இலங்கைக்கான பயணத் தடை நீடித்தது பிலிப்பைன்ஸ்!
இலங்கையிலிருந்து செல்லும் பயணிகள் மீதான தடையை பிலிப்பைன்ஸ் நீடித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்போதுள்ள அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் 2021 மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்தார்.
எதிர்வரும் பதினான்கு (14) நாட்களுக்கு ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இந்த இரு நாடுகளுக்கும் 2021 மே 15 முதல் மே 31 வரை பிலிப்பைன்ஸுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .