பாடசாலை மாணவர்களுக்கு மல்லாவியில் பைசர் தடுப்பூசி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையால் இன்று16 வயது மற்றும் 17 வயது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது க.பொ.த.சாதாரணதர / மற்றும் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று (22) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.