மன்னார் நகரில் 'பைசர்' தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் 'பைசர்'(Pfizer )கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி 3 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டுக் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'பைசர்' கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
தலைமன்னார், பேசாலை, மன்னார், வங்காலை, முத்தரிப்புத்துறை மற்றும் மடு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) 3 ஆவது நாளாக மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் 'பைசர்' கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றது.
நாளை (12) திங்கட்கிழமையும் குறித்த பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெறும்.இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் குறித்த தடுப்பூசியைப் பெற்றுச் செல்கின்றனர்.
மன்னார் மாவட்டத்திற்கு என சுமார் 20 ஆயிரம் 'பைசர்' தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
இந்த நடவடிக்கையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, உட்பட சுகாதாரத் துறையினர் மற்றும் இராணுவம் , வான்படை அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
