மட்டக்களப்பில் அரசாங்கத்தின் குடும்ப அட்டைக்கு பெட்ரோல் விநியோகம் (Video)
மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலங்களினால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையத்தின் அதிபர் தேசபந்து எம்.செல்வராசாவின் வழிகாட்டலில் 800 மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் விநியோகம்
பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்பட்டிருந்த குடும்ப அட்டைகள் பிரதேச செயலக அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்(Video) |