ஈரான் உடனான நீடித்து வரும் போர்! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவு
ஈரான் உடனான போர் நீடித்து வருவதால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான வெள்ளை மாளிகை அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய வழிகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பெட்ரோல் விலை
இந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்ப் மத்திய பெற்றோல் வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டத்திற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளார். இதன் மூலம் ஒரு கேலன் எரிபொருளுக்கு 18 சென்ட் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.
தற்போது அமெரிக்கா முழுவதும் ஒரு கேலன் பெற்றோலின் சராசரி விலை 4.50 டொலராக உள்ளது.

ஆரம்பத்தில் இந்த வரி இரத்துத் திட்டம் அவசியமற்றதாகக் கருதப்பட்டாலும், தற்போது விலையேற்றம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த நடவடிக்கை அவசரத் தேவையாக மாறியுள்ளது.
வெள்ளை மாளிகைக்குள் நிலவும் ஒருமித்த கருத்தின்படி, போர் தொடங்கியதில் இருந்து எரிபொருள் விலை 50% வரை உயர்ந்துள்ளதால், நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையிலான ஒரு நடவடிக்கை இப்போது தேவைப்படுகிறது.
வரலாற்று ரீதியாக, ஒரு கேலன் பெற்றோல் 4 டொலரைத் தாண்டும்போது அது பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் பொருளாதார கவலையையும் தூண்டுகிறது.
அதன் விளைவாகவே, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
உலகளாவிய எரிசக்தி சந்தை
சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் எரிபொருள் விலையேற்றத்தால் தங்கள் குடும்ப நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக, ட்ரம்ப்பின் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், இந்த விலை உயர்வு காரணமாகக் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்று அக்கட்சியினர் அஞ்சுகின்றனர்.

ஏழு மாகாணங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே ஒரு கேலனுக்கு 5 டொலரைத் தாண்டிவிட்டது. "முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பெட்ரோல் விலையேற்றம் எப்படிப் பலவீனமாக அமைந்ததோ, அது இப்போது நமக்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது" என்று வெள்ளை மாளிகையின் அரசியல் ஆலோசகர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகளைச் சமாளிக்கத் தகுந்த திட்டங்களை ஜனாதிபதி ட்ரம்ப் வைத்திருப்பதாகவும், அமெரிக்காவின் சொந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan