மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசாங்கம் சதியா...!
பெட்ரோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன.
இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கின்றதா என்றும் எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை அதிகரிப்பு
இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 400 ரூபாவாகும்.
எனினும், ஏனைய ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பெட்ரோல் விலை 30 ரூபாவால்
அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
