கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் : வன்முறைக்குழு அட்டகாசம்(Photos)
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத வன்முறைக்குழு நேற்றையதினம் இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.