“நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை கெடுக்கும் நபர்கள்”
நாடாளுமன்றத்திற்குள் பெண்களை வன்முறையாக நடத்தும் நபர்கள் மாத்திரமல்லாது அதனை ஆதரிப்போரும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை கெடுக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய (Harshini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த கலாசாரமே மக்களுக்கு அருவெறுப்பாக உள்ளது. நாடாளுமன்றத்திற்குள் அமைதியாக இருக்க முடியாது என்றால், வெளியில் எப்படி இருப்பார்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் நாட்டின் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.