கடன் வட்டி வீதம் தொடர்பில் மக்கள் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட கடன் வட்டி அதிகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்சமாக 15 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை
கடனுக்கான வட்டி 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு வங்கி அண்மையில் தாங்கள் வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 15 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், நிலையான வட்டி விகிதங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கான வட்டியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், சில தனியார் வங்கிகளும் நிலையான வட்டி விகிதங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்கான வட்டியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
