யாழில் நண்பர் வீட்டுக்கும் சென்றவர் திடீரென உயிரிழப்பு: இறப்பிற்கான காரணம் வெளியானது
கோப்பாய் பகுதியை சேர்ந்த நபரொருவர் தனது நண்பனின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கடத்தப்பட்ட போதைப்பொருள்: சந்தேகநபர் கைது |
குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
உடல் கூற்று பரிசோதனை
அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின்போது அவர் கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டடுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
இதனை தொடர்ந்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை
பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.