தென்னிலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட நபர்! கொலையில் அதிர்ச்சி பின்னணி
களுத்துறை - புளத்சிங்கள நாகஹதொல் பகுதியில் ஒருவர் தீவைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட நபர் மஹிங்கல - பாதுக்கை பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல நிஷாந்த என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்தவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் அருகே முகம் குப்புறக் கிடத்தப்பட்டு, அதன் மீது டயர்கள் பொருத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலத்த வெட்டுக் காயம்
இறந்தவரின் தலையில் பலத்த வெட்டுக் காயம் இருந்ததாகவும், அவரது தொடையிலிருந்து மார்பு வரை டயர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், மரணம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இருந்து, இறந்தவர் இன்று (28) காலை 10.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மத்துகம நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
