யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபொக்கணை பகுதியில் 30 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் கசிப்பினை வீதியில் கொண்டு சென்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
கைது செய்யப்பட்ட 39 வயதுடைய சந்தேகநபர் கசிப்புடன் அச்சு பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.