வெள்ளை நிற மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(06) மாலை இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம்

இதன்போது கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த 3600 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மண்ணெண்ணை வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை

மீட்கப்பட்ட மண்ணெண்ணெய் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் முழங்காவில்
பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற
நடவடிக்கைக்குட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri