முல்லைத்தீவில் தேர்தல் விதிமுறையினை மீறிய நபர் கைது!
முல்லைத்தீவு (Mullaitiivu) ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறி செயற்பட்ட நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (13.11.2024 ) மாலை ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறும் வகையில் செயற்பட்ட நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கட்சியின் சின்னம் பதிக்கப்பட்ட வர்ண பொருட்கள், கொடிகள், பெல்ட், தொப்பிகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
வழக்குப் பதிவு
11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தேர்தல் வீதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam
