அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு
இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்ந்து அமெரிக்கா, நேற்று அறுகம் குடா பகுதிக்கான சுற்றுலா பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தரப்புடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், பொது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் உடனடி மற்றும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளது.
எந்தவொரு பாதுகாப்பு எச்சரிக்கையையும் இலங்கை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அதற்கேற்ப, சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை போக்க, இலங்கை அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தினர்.
பாதுகாப்பு எச்சரிக்கை இரத்து
இதன்போது, குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள், சுற்றுலா ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சகலரும் இந்த முயற்சிகளுக்கு இலங்கை பொலிஸாருடன் நெருக்கமாக ஒத்துழைத்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை அரசாங்கத்துடனும் சட்ட நடைமுறைப்படுத்தலுடனும் வலுவான பங்காளித்துவத்தை மதிப்பதாகக் கூறி அமெரிக்கத் தரப்பு நேற்று பிற்பகல், தமது பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.
கடந்த ஒக்டோபரில், அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறி, அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை ஆலோசனையை வழங்கியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
