வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து திருடியவருக்கு விளக்கமறியல்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளது.
பணம், பொருள் மீட்பு
இதனை தொடர்ந்து இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.
இதற்கமைய, அவரை நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan