நீதிமன்ற சிறைச்சாலை கூடத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் தவறான துக்கில் தொங்கியவாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05.10.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
கப்புஹேன கனேமுல்ல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சமிந்த திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
