நீதிமன்ற சிறைச்சாலை கூடத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் தவறான துக்கில் தொங்கியவாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05.10.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

கப்புஹேன கனேமுல்ல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சமிந்த திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri