புத்தளத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
புத்தளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் கொட்டுக்கச்சி கல்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றை நேற்று (23.10.2024) பிற்பகல் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.
சட்டவிரோத துப்பாக்கிகள்
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவற்றை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
