யாழில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்பு போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு மீட்பு
அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக குறித்த நபர் கசிப்பினை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
இந்நிலையில், சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஏழு லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட கசிப்புடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
