பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் கைது!
பஞ்சிகாவத்தை பகுதியில் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஞ்சிகாவத்தை பகுதியில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வீடொன்றின் அருகே இருந்த நபரொருவரைத் துப்பாக்கியால் ஒரு நபரைச் சுட முயன்றனர்.
எனினும் துப்பாக்கி இயங்கவில்லை, அதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பொலிஸாரின் விசாரணை
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருதானை பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்று தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
