தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்தியவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனியார் பேருந்து சாரதியை எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள்
இதன்போது, தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி அங்கிருந்து வெளியேற முடியாமல் பேருந்து செலுத்துவதில் சிரமப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை மற்றைய வாகன சாரதிகள் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமையவே, குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
