தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்தியவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனியார் பேருந்து சாரதியை எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள்
இதன்போது, தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி அங்கிருந்து வெளியேற முடியாமல் பேருந்து செலுத்துவதில் சிரமப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை மற்றைய வாகன சாரதிகள் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமையவே, குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
