வெளிநாடுகளில் இருந்து தேங்காய் பத்தைகளை இறக்குமதி செய்ய அனுமதி
நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாகுறை காரணமாக தேங்காய் சார்ந்த தொழில் துறையினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காக குளிரூட்டி பதப்படுத்தப்பட்ட தேங்காய் பத்தைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
குளிரூட்டி பதப்படுத்தப்பட்ட தேங்காய் பத்தைகள் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பீ. எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் தேங்காய் பற்றாகுறை காரணமாக சில்லறை சந்தையில் ஒரு தேங்காய் 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அரிசிக்கு இணையான விலையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் கூறியுள்ளனர்.