பயிற்றுவிக்கப்பட்ட பயிலுநா்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
வேலையற்ற பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரர்களை தொழிலில் நிலைப்படுத்தும் வேலைத்திட்டம் (2020) இன் கீழ் சோ்த்துக் கொள்ளப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட பயிலுநா்களுக்காக நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியா் கல்லூரிகளில், ஆசிரிய மத்திய நிலையங்களில் மற்றும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று, 2022 ஜனவரி மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற, கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள் / டிப்ளோமாதாரார்கள், தமது நிரந்தர நியமனக் கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட தினங்களில் பத்தரமுல்ல, “இசுருபாய” வளாகத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் வருகை தரும்போது தேசிய அடையாள அட்டை மற்றும் 2021 டிசம்பா் 31 ஆம் திகதி வரை பயிற்சி பெற்றுக் கொண்டிருந்ததாக உறுதிப்படுத்துவதற்காக தாபனப் பொறுப்பாளாரின் கடித்துடன் வருகை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகள் பயிற்சி பெற்ற மாவட்டங்களின் அடிப்படையில் வருகைதர வேண்டிய தினங்கள் பின்வருமாறு,
கொழும்பு, மாத்தறை - 2022 ஜனவரி 11
ஹம்பாந்தோட்டை, கேகாலை, பதுளை இரத்தினபுரி, மாத்தளை - 2022 ஜனவரி 12
கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை - 2022 ஜனவரி 13
வவுனியா, மன்னார், கம்பஹா, காலி - 2022 ஜனவரி 18
அம்பாறை, மொணராகல, புத்தளம், களுத்துறை - 2022 ஜனவரி 19
குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா,
முல்லைத்தீவு - 2022 ஜனவரி 20

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021