பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்
பேரறிவாளனுக்கு (A. G. Perarivalan) மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 5 மாதங்களாக பரோலில் வெளியில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி பேரறிவாளனுக்கு பரோலில் விடுப்பு வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்தே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பரோல் காலமானது இன்றுடன் முடிவடைகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam