பல்கலைக்கழக மாணவரொருவர் மாயம்! கடிதமொன்றும் மீட்பு - விசாரணைகள் தீவிரம்
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல்போயுள்ள நான்காம் வருட மாணவர்
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 24 வயதுடைய மாணவன் சில தினங்களுக்கு முன்னர் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடிதம் மீட்பு
இந்த நிலையில் காணாமல்போன இளங்கலை மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த தங்கும் அறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
எனினும் இன்று காலை வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
