190 நாட்களுக்குள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை: வெளியாகியுள்ள தகவல்
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியிலேயே உள்ளனர்.
அடக்குமுறை சட்டமூலங்கள்
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நாடாளுமன்றில் சில அடக்குறை சட்டமூலங்களை நிறைவேற்றி வருகின்றது.
மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகள் தொடருமாயின் எதிர்வரும் 190 நாட்களுக்குள் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
அப்போது நாட்டு மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
