மன்னாரில் மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட மணல் அகழ்வு பணி
தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் மணல் அகழ்வு பணி மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.02.2024) இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒப்பந்த நிறுவனம்
இந்த சந்தர்ப்பத்தில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததோடு எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மக்களின் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
