இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியேறிய மக்கள்
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்து பொது மக்கள் வெளியேறியுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் கடந்த மோசமான காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்பு காணப்பட்டதால் குறித்த வீடுகளில் வசித்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 உறுப்பினர்கள் தற்காலிகமாக கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த நாட்களில் சீரான காலநிலை நிலவி வருவதால் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பின்னர் கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை பாடசாலைகள் (05) ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று (4) தற்காலிக முகாமில் இருந்து மக்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.




திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam