எரிபொருளுக்காக 5 நாட்கள் வரிசையில் நின்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள்(Video)
பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலை நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 5 நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம்(27) இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவு
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்கும் மேலாக வரிசையில் இருந்தவர்களை தங்களது வாகனங்களை குறித்த இடத்திலிருந்து அகற்றுமாறு இராணுவத்தினர் கோரிக்கையை விடுத்து நீண்ட வரிசையில் நின்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் மக்கள் மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கரவண்டி களையும் நிறுத்தி நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
மக்கள் கவலை
தற்போது இராணுவத்தினர் பொது மக்களின் பெயர்களை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பதிவு செய்கின்றனர்.
இதன்போது ஐந்து நாட்களாக வரிசையில் நிற்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
May you like this video